தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 12 கி,மீ  தொலைவில் அமைந்திருக்கும் குலசேகரன்பட்டிணம் என்ற ஊரில் சித்தர் பதஞ்சலி மகரிஷி அவர்களின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் திருக்கோவிலின்  பின்புறம் கடற்கரை அருகில் அமைதியான இடத்தில் தன்னைத் தேடி வருபவர்களுக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் அள்ளி அள்ளி வழங்கி  கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் பழைய கால  இடிந்த கட்டிடம் ஒன்று இருந்தது. ஒரு மகானின் ஜீவ சமாதி என்று மட்டும்  பலருக்கும் தெரிந்திருக்கும் இந்த இடம் சில வருடங்களுக்கு முன் நாராயண  பிள்ளை அய்யா அவர்கள் இந்த சமாதியை இனம் கண்டு தன் வாழ்நாளில்  பல நாட்களை பதஞ்சலி மகரிஷியின் காலடியிலே கழித்தார்.  

நாரயணபிள்ளை தன் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்னர் இடிந்த நிலையில் இருந்த கட்டிடத்தை புதுப்பித்து திருப்பணியை மேற்கொண்டார் மகரிஷியின் அருளால் எல்லாம் சிறப்பாக நடந்தேறியது.

வெளியூரில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பதஞ்சலி மகரிஷியின் அருளைப்பெற மக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். உண்மையான அன்போடு தன்னைத்தேடி வருபவர்களுக்கு அன்பையும் செல்வத்தையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் வாரி வழங்கி கொண்டிருக்கிறார்.

1 comment:

  1. Free Baccarat | Bet on Online & Casino Games at Fair Play Casino
    Best online casino free baccarat ✓ Try your hand 바카라 사이트 at free baccarat, where you can septcasino win real money and play for real 온카지노 money.

    ReplyDelete

பதஞ்சலி மகரிஷி

வீடியோ

அதிகம் படிக்கப்பட்டவை